முஸ்லிம்களை இனப்படுகொலை செய்யத் திட்டமிடும் ஏபிவிபியினர்!
முஸ்லிம்களை இனப்படுகொலை செய்யத் திட்டமிடும் ஏபிவிபியினர்!
பாஜகவின்
மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) கசிந்த
வாட்ஸ்அப் சாட்டிங் சமூக ஊடக தளங்களில் வைரலாகிள்ளது, அதில், ஏபிவிபி
மாணவர்கள் நாட்டில் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்வது பற்றி
விவாதிக்கின்றனர்.
இந்த சாட்டிங் டெல்லி தொழில்நுட்ப
பல்கலைக்கழகத்தின் (DTU) ABVP வாட்ஸ்அப் குழுவைச் சரந்த்தது என
கண்டறியப்பட்டுள்ளது. குழுவிற்கு "ABVP DTU ஃப்ரெஷர்ஸ்" என்று
பெயரிடப்பட்டுள்ளது, இந்த சாட்டிங் மற்றும் செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்கள்
இந்த குழுவில் உள்ள பல உறுப்பினர்கள் முஸ்லிம் இனப்படுகொலை மற்றும்
முஸ்லிம்களின் வெகுஜன மதமாற்றம் பற்றி விவாதிப்பதைக் காட்டுகின்றன.
இந்த
குழுவில் உள்ள உறுப்பினர்களில் ஒருவன், "பெரும் எண்ணிக்கையிலான
முஸ்லீம்களை அழிக்க முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் வெடிகுண்டு
அல்லது வேறு விபத்திற்கு சதித்திட்டம் தீட்டப்பட வேண்டும் என்று அலோசனை
சொல்கிறான் மற்றொருவன், இஸ்லாமிய பெண்களை வாங்க அல்லது கடத்த
'பகாவா லவ் ஜிஹாத்' தை செயல்படுத்த
பரிந்துரைக்கிறான்.
'பகாவா லவ் ஜிஹாத்' என்றால் முஸ்லிம் பெண்ணை காதல் என்ற போர்வையில் கடத்திச் செல்வது.
![]() |
| ABVP Workers |
உரையாடலின்
ஒரு பகுதியாக இருந்த மற்றொருவன், "முஸ்லீம்கள் மீது ஒரு பெரிய இனப்படுகொலை
அல்லது பெரும் கருத்தடை சதித்திட்டம் தீட்டப்பட்டு, முஸ்லீம் சமூகத்திற்கு
பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் " என்று கூ,றுகிறான். அவனே இன்னொரு
இடத்தில், "இந்து மகாச? சபை அல்லது பிற வலதுசாரி இந்துத்துவா குழுக்கள்
முஸ்லீம் பெண்களை திருமணம் செய்து அவர்களை இந்துவாக மாற்றுவது
எப்படி எனபது பற்றி ஒரு பாடத்திட்டத்தை தொடங்க வேண்டும்" என்றும் கருத்து தெரிவிக்கிறான்.
இந்தியாவை
வழிநடத்தும் எதிர்கால இளையத்தலைமுறையை இப்படித்தான் வன்முறையாளர்களாக,
பாலியல் பலாத்கார பயங்கரவாதிகளாக, கொலைகரர்களாக உருவாக்க விரும்புகின்றன
சங்பரிவாரங்கள்.

Comments
Post a Comment